/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, January 23, 2012

23-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.

SRM பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் வ. தனலெட்சுமி அவர்கள் தொடரியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.

அடுத்த அமர்வில் அண்ணா பல்கலைக்கழக மேனாள் கணினித்துறைப் பேராசிரியர் வெ.கிருட்ணமூர்த்தி அவர்கள் ஓளிவழி எழுத்துரு அறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.எளிமையான விசைப்பலகை உருவாக்கம் மற்றும் எழுத்துணரியின் பயன்பாடுகள், அச்சுப்பிரதியைக் கணினித்திரையில் தோற்றம் செய்தல், எழுத்துப்பிழையைச் சரிபார்த்தல் என தமிழின் முக்கிய செயல்பாடுகளையும் மென்பொருளையும் விளக்கிக்காட்டினார்.


மதியம் அமர்வில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் மொழித் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் உரையை முன்வைத்தார்.



கணினிமொழி உருவாக்க வேண்டுமெனில் தமிழ்மொழியில் புதிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும் என கூறினார்.
பொருளடைவை உருவாக்க வேண்டும், விகுதிகளைப் பிரித்து அதற்குத் தனியாகப் தொகுப்புச் செய்யவேண்டும்.
புணர்ச்சி இலக்கணத்தையும் பிரித்து ஆய்வு செய்யவேண்டும் என்று கூறினார்.

அடுத்த அமர்வில் முனைவர் இரா.சண்முகம் உருபனியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் ஒரு சொல்லைப் பிரித்து அதன் இலக்கணக் கூறுகளைப் பிரிக்கும் வசதியைக் கணினி எவ்வாறு செய்கிறது என்று விளக்கினார்.


பயிலரங்கில் கலந்து கொண்ட மயிலாடுதுறை அ.வ.கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்

மதுரை விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.முத்தையா அவர்கள் பயிற்ச்சியில் கலந்துகொண்ட காட்சி


2 comments:

  • வணக்கம் மகிழ்ச்சி உங்கள் பதிவிடல் மூலம் நடந்த நிகழ்வுகளை அறியமுடிந்தது . வலையேற்றத்திற்கு நன்றி.

  • Umaraj says:
    September 22, 2015 at 11:08 PM

    நன்றி ஐயா