/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 21, 2014

ஈ.வெ.ராமசாமி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ் இணையப்பயிலரங்கம்


21-02-2014, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசினர் கலைக்கல்லூரியின் தமிழாய்வுத்துறை சார்பாக ஒருநாள் தமிழ் இணையப்பயிலரங்கம் இனிதே தொடங்கியது.
இந்தப் பயிலரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்புரையாக முதலில் நான் (துரை.மணிகண்டன்) கணிப்பொறியின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து உரை நிகழ்த்தினேன். கணினியின் தலைமுறைகள், வகைகள், மென்பொருள், வன்பொருள், பயன்பாடுகள் பற்றி பேசப்பட்டது.
எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது என்றும் NHM எழுதியைத் தரவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்யும் முறையை எடுத்துக் கூறினேன். அடுத்து தமிழ்விக்கிப்பீடியா, தமிழ் இணைய இதழ்களில் எவ்வாறு ஒருங்குறி முறையில் தட்டச்சு செய்வது என்றும் செயல்முறை விளக்கம் அளித்தேன்.


முனைவர் ப. கிருஷ்ணன்,பேராசிரியர் சங்கரநாரயாணன், முனைவர் துரை.மணிகண்டன், தமிழ்த்துறைத் தலைவர் கா.வாசுதேவன், பேராசிரியர் து.தியாகராசன்.

மு.அருணாச்சலம் அவர்கள் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் அவர்களுக்கு சிறப்புச்செய்தல்.

இரண்டாவதாக முனைவர் தி.நெடுஞ்செழியன் இணையத்தமிழ் குறித்த தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமிழ் இணையக் கலிவிக்கழகத்தின் பயன்பாடுகள் அதனால் எவ்வாறு மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
நூலகம், சென்னை நூலகம், செம்மொழி நிறுவனத்தின் தமிழ்ப் பணிகள் குறித்த செய்திகளை மாணவர்களுக்கு விளக்கினார்.

பயிற்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள்

0 comments: